சனவரி - 2024-1

உலகின் பல நாடுகளில் தமிழர்கள் கல்விப்பணியின் பொருட்டு குடியேறி வாழ்ந்து வருகின்றனர். பிற மண்ணில் வாழ்ந்து வரும் தமிழர்கள் தமிழ் அமைப்புகளை நிறுவி அதன் மூலம் தமிழ்ப்பணி ஆற்றி வருகின்றனர். புலம்பெயர் தமிழர்கள் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு குறித்த நிகழ்வுகளைத் தமிழ் அமைப்புகள் மூலம் நிகழ்த்தி வருகின்றனர். வெவ்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளும் அதன் செயல்பாடுகளும் தனித்தனியாக நின்றுவிடாமல் ஒன்றோடொன்று ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். தமிழ் அமைப்புகளின் பணிகளை உலகளவில் தெரிந்துகொள்ள, தொடர்பு கொள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக, மின்னிதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

“உலகத்தமிழ்” எனும் மின்னிதழ் மூலமாக, வளர்ந்து வரும் சூழலுக்கேற்ப மொழியில் இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை, புதுமைகளை, அமைப்புகள் பரிமாறிக் கொள்ள ஏதுவாக இம்மின்னிதழ் அமையும். அயலகத் தமிழர்களின் இளைய தலைமுறை, தமிழைப் பேச்சு மொழியாக, எழுத்து மொழியாகப் பயன்படுத்த, புரிந்து கொள்ள மின்னிதழ் துணைபுரியும். தமிழின் வளங்களையும் இலக்கணச் செழிப்பையும் மொழியியல் அமைப்பையும் அறிந்து கொள்ள இவ்விதழ் பேருதவியாய் இருக்கும். உலகெங்கும் உள்ள ஆய்வாளர் தமிழ்மொழி, பண்பாடு மற்றும் தமிழ் இலக்கியம் குறித்து அறிந்து கொள்ளவும் இம்மின்னிதழ் வழிவகுக்கும். உள்நாட்டிலும் அயலகத்திலும் தமிழ்மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல “உலகத்தமிழ்” என்னும் மின்னிதழ் முன்னோடியாய் அமையும்.

அண்மை கட்டுரைகள்

காலாண்டிதழ்

Resize text-+=